14/Jun/2021 09:17:32
புதுக்கோட்டை, ஜூன்: மருத்துவ கழிவுகளை
முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகள்
கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல்
மாறுபாடு அமைச்சகம், மருத்துவ கழிவுகளை முறையாக
சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவ கழிவுகள் மேலாண்
விதிகள்-2016 அறிக்கை செய்துள்ளது.
இவ்விதிகளை பின்பற்றுவதன்
மூலம் மருத்தவ கழிவுகளின் உற்பத்தியையும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைத்திட
இயலும். இவ்விதிகளை அமல்படுத்த, செயல்படுத்துவதற்கான அதிகாரம் தமிழ்நாடு மாசு
கட்டுப்பாடு வாரியத்திடம் உள்ளது.
இவ்விதிகளின் படி, மருத்துவமனைகளிலிருந்து உருவாகும் மருத்துவ கழிவுகள்
முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலைங்களிடம்
சுத்திகரிப்பு செய்வதற்காக
ஒப்படைக்க வேண்டும். மேலும், தொற்று ஏற்படுத்த கூடிய மருத்துவ கழிவுகளை
48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமித்தல் கூடாது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளுவதற்காக அனைத்து
மருத்துவமனைகள், உள்ளாட்சி
அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு
ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.
இருப்பினும், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக
மருத்துவ கழிவுகள் சாலைகள், ஆற்றங் கரைகள், நீர் நிலைகள் மற்றும்
ஒதுங்கிய பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது
தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடந்து பெறப்படுகின்றன.
தற்போது நிலவிவரும் கோவிட்-19
நோய் தொற்று சூழலில், மருத்துவக்கழிவுகளை முறை யில்லாமல் திறந்த
வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும்
சுற்றுச்சூழலுக்கு கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, அனைத்து மருத்துவமனைகள், கோவிட்-19 பராமரிப்பு மையங்கள்,
மற்றும் தனிமைபடுத்தப்பட்ட
முகாம்கள், மருத்துவ கழிவுளை முறையாக பிரித்து,
சேமித்து அந்தந்த பகுதிகளில் மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவ கழிவு
சுத்திகரிப்பு நிலையங்களிடம்
மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.
மேலும், அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை
அகற்றுவதை தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல்
மீறுபவர்கள் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.