08/Oct/2020 09:13:36
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 – அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு எனும் அழகிய கிராமத்தில் அருணாசலம் – விசாலாட்சி தம்பதியருக்கு பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். கவிஞரின் மனைவி கௌரவம்மாள்; மகன் குமாரவேலு. மனைவிக்குக் கடிதம் எழுதினாலும், தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவார் கவிஞர். இவர் திருமணம் பாவேந்தர் தலைமையில்தான் நடைபெற்றது.
கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் பாடல்களாக இசைத்தார்.
தேனாறு
பாயுது... செங்கதிரும்
பாயுது...ஆனாலும்
மக்கள் வயிறு
காயுது..! மகாகவி
பாரதியாருக்குப் பிறகு, சமூக அக்கறை
மிகுந்த தனது
பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
தத்துவம்,
அரசியல், காதல்,
நகைச்சுவை, சோகம் என பல உணர்வுத்தளங்களில்
பாடல்கள் எழுதியுள்ளார்.
187 பாடல்களை மட்டுமே எழுதியிருந்த சூழலில்,
தனது 29 வயதிலேயே இயற்கையோடு கலந்தார். பட்டுக்கோட்டையாரைப்
பொறுத்தவரை பாடல்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே
அல்ல. அவரது
வரிகள் ஒவ்வொன்றும்
காலத்தில் எதிர்
நீச்சல் போடுபவை.
மனிதன் பூமியில்
வாழ்கின்ற காலம்
வரைக்கும் நிலைத்து
நிற்பவை. எல்லா
காலங்களுக்கும் பொருந்திப் போகிறவை.
உதாரணமாக, சமீபத்தில், வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு
விஜய்மல்லையா உல்லாசப் பயணத்திலிருப்பதையும்,
டிராக்டருக்கு தவணை கட்டவில்லையென ஒரு விவசாயி
போலீசால் தாக்கப்பட்டதையும்
ஒப்பிட்டு பார்ப்போம்.
பட்டுக்கோட்டையின் வரிகள்:
பட்டப்பகல்
திருடர்களை பட்டாடைகள் மறைக்குது - ஒருபஞ்சையத்தான் எல்லாம்
சேர்ந்து திருடனென்றே
ஒதைக்குது! (பொறக்கும்போது
பொறந்த குணம்
போக போக
மாறுது...)
எத்தனை
ஆண்டுகள் கழித்தும்
அவரது பாடல், இன்றைய
சமூகத்தை தோலுரிப்பதாக
உள்ளது...இதுதான்
பட்டுக்கோட்டையார். அதுவும் இந்த
தேர்தல் நேரத்தில்
நாம் அனைவரும்
கேட்க வேண்டிய
மற்றொரு பாடல்:
குறுக்கு
வழியில் வாழ்வு
தேடிடும் குருட்டு
உலகமடா- இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா-
தம்பிதெரிந்து நடந்துகொள்ளடா- இதயம் திருந்த மருந்து
சொல்லடா !.
சைனஸ்
தொல்லைக்காக ஆபரேஷன் செய்தபோது, டாக்டர்கள் தவறான
இடத்தில் ஆபரேஷன்
செய்துவிட, அதன் பக்கவிளைவாக முகம் வீங்கி
சிகிச்சை பலனின்றி, தமது
29 வயதில் 8.10.1959 ல் பட்டுக்கோட்டையார்
இயற்கை எய்தினார்.
ஒரு
முறை ஜனசக்தி
பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர். பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரத்திடம், பெரிய கவிஞர்களான கம்பன், இளங்கோ,
பாரதி போன்றவர்களே
பெயரை சிறிதாக
வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் ஏன்
இவ்வளவு பெரிய
பெயரை வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
என்று கேட்டாராம்.
அதற்கு பட்டுக்கோட்டை, அவர்கள்
பெரிய கவிஞர்கள்.
நான் சின்னக்
கவிஞன் பெயராவது
பெரிதாக இருக்கட்டுமே என்றாராம்.
தன்னடக்கமாக
அவர் அப்படிச்
சொல்லியிருந்தாலும், மானுட சமூகத்தின் மீது
அவர் கொண்ட
நேசத்தாலும் அக்கறையாலும், மாபெரும் கவிஞராகவே மக்களின்
இதயத்தில் என்றென்றும்
நிறைந்திருப்பார். பட்டுக்கோட்டையாரின் பாடல்களை நாட்டுடமையாக்கி, அரசு தனக்கு பெருமை
சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும்
நாம், நம்
குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின்
வாயிலாக பெருமை
தேடிக்கொள்வோம்.
அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும்
நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய
நாளை நீங்கள்
மகத்துவமானதாக மாற்றலாம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நினைவு நாளில்
அவருக்கு புகழ்
வணக்கம் செலுத்துவோம்.-
தொழிலாளி