01/Apr/2021 12:05:14
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல்
6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் சொந்த
ஊருக்குச்சென்று வாக்களிக்க
வசதியாக
அரசு போக்குவரத்துக்கழகம்
சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் (6.4.2021) தங்களது வாக்குகளை உரிய வாக்குமையத்தில்
பதிவுசெய்ய
வசதியாக
அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) சென்னையிலிருந்து
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம்,
நாகப்பட்டினம், காரைக்கால்
வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி,
வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர்,
புதுக்கோட்டை, காரைக்குடி,
ராமநாதபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்கு வருகிற 4, 5 ஆகிய இரு நாள்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம்,
புதுக்கோட்டை, மதுரை
ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை
ஆகிய
ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக
இயக்க பகுதிக்கு உள்பட்ட அனைத்து முக்கிய
நகரங்களுக்கு 1.4.2021 முதல் 8.4.2021
வரை,
அனைத்து
முக்கிய நகரங்களிலிருந்து பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
ஏப்4 முதல் 5 வரை
சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம் மற்றும் திருவையாறு
செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும்.
கரூர்,
திருச்சி,
அரியலூர்,
செந்துறை,
ஜெயங்கொண்டம்
புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது
மேலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல
6.4.2021, 7.4.2021, 8.4.2021 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு போக்குவரத்து கழகம்
கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் தகவல்
வெளியிட்டுள்ளார்.