logo
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் டிச.25-இல் சொர்க்கவாசல் திறப்பு

ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் டிச.25-இல் சொர்க்கவாசல் திறப்பு

17/Dec/2020 07:47:20

ஈரோடு, டிச:ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 25-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. கோரணா பரவல் காரணமாக இந்த வருடம் எளிமையாக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பகல் பத்து உற்சவம் தொடங்கியது. அடுத்த பத்து நாட்கள் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் மூலவர் கருவறையில் இருந்து அருள் பாலிப்பார். வரும் 24-ஆம் தேதி கல்மண்டபத்தில் மோகினி (நாச்சியார்) அலங்காரத்தில் காட்சி அளிப்பார். அதைத் தொடர்ந்து 25 -ஆம் தேதி அதிகாலை 2. 45 மணிக்கு திருமஞ்சனம் மகா தீபாராதனை நடத்தப்படுகிறது. 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது 


       

Top