29/Jun/2021 04:44:21
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.50,000 அபராதம் விதித்தும் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது
புதுக்கோட்டை மாவட்டம், பென்னமராவதி தாலுகா,
வடக்கிப்பட்டியில் வசித்த
சுமார் 9 வயது மதிக்கத்தக்க நான்காம் வகுப்பு
படித்து வந்த பள்ளி சிறுமியை பக்கத்து
வீட்டில் வசித்து வந்த வெ, உதயச்சந்திரன் (30) கடந்த 17.12.2019-ஆம் தேதியன்று பாலியல் வன்கொடுமை செய்தது.
தொடர்பாக பென்னமராவதி காவல் நிலையத்தில் மேற்படி
சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில் செவ்வாய்க்கிழமை (29.6.2021) உதயசந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதமும் இதைக் கட்டத் தவறினால் 1 வருடம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி முனைவர் ஆர். சத்யா தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞர் அங்கவி ஆஐரானார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2,00,000- அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும் உத்ததரவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை சிறப்பாக புலன்விசாரணை செய்த பொன்னமராவதி காவல் நிலைய
ஆய்வாளர் கருணாகரன். (தற்போது முசிறி காவல் நிலையம் , திருச்சி) மற்றும்
நீதிமன்ற பணிக்காவலர் முதல் நிலை காவலர்
(2076) நாகநாதன் ஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் வெகுவாக பாராட்டினார்.
தீர்ப்புக்கு பின்னர் குற்றவாளி உதயச்சந்திரன் திருச்சி
மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.