07/Jun/2021 09:50:09
சென்னை, ஜூன்: தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.20 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சுற்றுச்சூழல்
துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திங்கள்கிழமை நேரில் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்காக
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு
வாரியத்தின் சார்பாக ரூ. 20 கோடிக்கான காசோலையை
வழங்கினார்.