logo

ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா இன்று நடந்தது

13/Dec/2020 08:44:43

ஈரோடு- டிச: ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும்  தேர்த்திருவிழா டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 140 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த 6- ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

 தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. முக்கிய விழாவான தேர்த்திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் திருப்பலி (பூஜை) நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது. விழாவில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளி, முகக்கவசம் பயன்படுத்தப்பட்டு பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.

வழக்கமாக அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, நேதாஜி ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

தற்போது கொரோனா பரவல் இருப்பதால், வேண்டுதல் தேர் மட்டும் எடுக்கப்பட்டது. இந்த தேர் ஆலயத்தை சுற்றி எடுக்கப்படும். தேரின் பின்னால் பக்தர்கள் ஊர்வலமாக செல்லாமல் ஆலயத்தில் உட்கார்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். காலை 6 மணி, காலை 8 மணி திருப்பலியை கோவை மறை மாவட்டம் ஜீவஜோதி ஆசிரமத்தின் இயக்குனர் அருள்தந்தை செல்வராஜ் திருப்பலி நிறைவேற்றினார். 

காலை 10.30 மணிக்கு உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் திருப்பலி நிறைவேற்றினார். மாலை 5.30 மணிக்கு திருப்பூர் குழந்தை இயேசு பள்ளிக்கூட தாளாளர் அருள்தந்தை ததேயு திருப்பலி  நடக்கிறது. 4 திருப்பலிகளின் முடிவிலும் வேண்டுதல் தேர் எடுக்கப்பட்டது. வருகிற 20- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் 4 திருப்பலிகள் நடைபெறும் என்று பங்குத்தந்தையர்கள் ஜான்சேவியர், லாரன்ஸ் ஆகியோர் தெரிவித்தனர். 


Top