logo
ஆலங்குடியில் பொதுமுடக்க விதியை மீறிய ஜவுளி, நகைக்கடைக்கு ரூ.8 ஆயிரம் அபராதம்.

ஆலங்குடியில் பொதுமுடக்க விதியை மீறிய ஜவுளி, நகைக்கடைக்கு ரூ.8 ஆயிரம் அபராதம்.

23/Jun/2021 06:53:09

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பொதுமுடக்க விதியை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளி, நகைக்கடைக்கு வருவாய்த்துறையினர் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆலங்குடியில் பொதுமுடக்க விதிகளை மீறி ஜவுளி, நகைக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஆலங்குடி கடைவீதியில் வட்டாட்சியர் பொன்மலர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விதியை மீறி திறக்கப்பட்டிருந்த ஜவுளி, நகைக்கடைகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத தேநீரகம் உள்ளிட்ட 4 கடைகளுக்கு வட்டாட்சியர் பொன்மலர் ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தார்.மேலும், பொதுமுடக்க விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Top