logo
ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில்  பொதுமக்கள் கூடுவதை  தவிர்க்க நடவடிக்கை: எஸ்.பி.சசிமோகன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை: எஸ்.பி.சசிமோகன் தகவல்

17/Jun/2021 07:41:27

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில்  பொதுமக்கள் கூடுவதை  தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.சசிமோகன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை கிராமப்புறங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் கொரோனா  பரவலை கட்டுபடுத்த போலீசார் புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கூறியதாவது: ஊரடங்கு காலமான தற்போது கிராமங்களில் மக்கள் ஓரிடத்தில் கூட்டமாக கூடி பல மணி நேரம் பேசுகின்றனர். மேலும் கிராமப்புறங்களில் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வுகள் குறித்து தகவல்  தெரிவிப்பதில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகளவில் மக்கள் ஒன்றாக கூடுகின்றனர்.

இதுவே கிராமப்புறங்களில் கொரோனா பரவலுக்கு பிரதான காரணமாக அமைகிறதுகிராமங்களில் பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் கிராமங்களில், கிராம கமிட்டி தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதில் போலீசார், சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் இதில் இடம் பெற்று இருப்பர். கிராமங்களில் கூட்டம் கூடுவது குறித்து கிராம கமிட்டியினர் தகவல் அளிப்பர்அதனடிப்படையில் போலீசார், வருவாய் துறையினர், சுகாதார துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.

ஏற்கெனவே கிராம கமிட்டி உள்ள இடங்களில் உடனடியாக அவை செயல்பாட்டு வரும். ஏனெனில் கிராம கமிட்டி ஏற்கெனவே ஈரோடு மாவட்டத்தில் செயல்பாட்டில் இருந்ததுகிராமங்களுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட போலீசார் கிராமங்களுக்கு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.

கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றாக சமூக இடைவெளியின்றி கூடுவதை தடுக்க மொபைல் டீம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களும் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றார் அவர்.

Top