logo
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 787 பேர் மீது வழக்கு-720 வாகனங்கள் பறிமுதல்; ரூ.4.78 லட்சம் அபராதம்

ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 787 பேர் மீது வழக்கு-720 வாகனங்கள் பறிமுதல்; ரூ.4.78 லட்சம் அபராதம்

15/Jun/2021 07:43:03

ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 787 பேர் மீது வழக்குப்பதிந்து 720 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து  ரூ.4.78 லட்சம் அபராதம் விதித்தனர்

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 21 -ம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சசிமோகன் தெரிவித்திருந்தார்.

22-ஆவது நாளான  செவ்வாய்க்கிழமை  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் முக கவசம் அணியாமல் வந்த 278 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 787 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 702 இருசக்கரவாகனங்களும், 18 சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரு  நாள் மட்டும் ரூ.4.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் வரும் 21-ஆம் தேதி வரை தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட  சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. சோதனைச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலோனோர் மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்வதாக போலீசாரிடம் கூறினார். எனினும் -பதிவு இன்றி வந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Top