logo
ஈரோடு பேருந்து நிலையத்தில் வ.உ.சி.காய்கறி சந்தை வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு பேருந்து நிலையத்தில் வ.உ.சி.காய்கறி சந்தை வியாபாரிகள் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை

11/Jun/2021 05:47:03

ஈரோடு, ஜூன்: ஈரோடு பேருந்து நிலையத்தில் ..சி.காய்கறி சந்தை வியாபாரிகள் 500 பேருக்கு மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆர்.கே.வி. சாலையில்  இயங்கி வந்த நேதாஜி பெரிய  காய்கறி மார்க்கெட் ஈரோடு . .சி.பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டு தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள்.50-க்கும் மேற்பட்ட பழ வகை கடைகள் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான மொத்த வியாபாரிகள், சில்லரை, வியாபாரிகள் பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2 - ஆவது அலையின் தாக்கம் காரணமாக தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக . .சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும் பொது மக்கள் பாதிக்காத வகையில் ஈரோடு  பேருந்து நிலையத்தில் தற்போது காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக மாற்றப்பட்டு மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

தினமும் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் நிலையத்திற்கு வந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.

இதுதவிர நூற்றுக்கணக்கான தள்ளு  வண்டிகளிலும் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. பொது மக்களுடன் நேரடி தொடர்பில் காய்கறி வியாபாரிகள் உள்ளதால் அவர்கள் அனைவருக்கும்  மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வெள்ளிக்கிழமை ஈரோடு பேருந்து நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த 4 மருத்துவ குழுக்கள்  மூலம்  வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Top