15/Jun/2021 11:21:48
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில் கல்லுரியில் படித்து வீட்டில் இருந்த இளம் பெண்ணை நகைக்காக தனது தங்கை என்று பாராமல் கொலை செய்த அண்ணன் உறவு முறையுள்ள இளைஞர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து சிறையிடைக்கப்பட்டார்.
திருமயம் அருகே மருக்கூர் சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் (எ) சுரேஷ் (29) என்பவர் கடந்த 27.4.2021 அன்று புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் சரகத்தில் பொன்நகர், அசோக் நகரில் வீட்டில் இருந்த இளம் பெண்ணை நகைக்காக கொலைசெய்தார். இது குறித்து கணேஷ்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மேற்படி நபர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆணையின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு புதுக்கோட்டை சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை (15.6.2021) திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.