logo
அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள்,  18 வயதுக்கு மேல்பட்டர்களுக்கு கோவிட் தடுப்பூசியில்   முன்னுரிமை : ஆட்சியர் தகவல்

அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள், 18 வயதுக்கு மேல்பட்டர்களுக்கு கோவிட் தடுப்பூசியில் முன்னுரிமை : ஆட்சியர் தகவல்

26/May/2021 09:11:23

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக்கிய ஆயுதமாக கருதப்படும் கோவிட்-19 தடுப்பூசி  ஏற்கெனவே முன்களப்பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் ஆணைக்கிணங்க  புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக  கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

குறிப்பாக பொது மக்களுடன் நெருக்கமாக பணிபுரிய கூடிய கீழ்கண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கோவிட்-19 தடுப்பூசி போடப்படவுள்ளது. அந்தவகையில் செய்தித்தாள் விற்பனையாளர்கள், பத்திரிகை ஊடக நபர்கள், பால் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், தெருவோர  விற்பனையாளர்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்ஸி டிரைவர்கள்பஸ் டிரைவர், நடத்துனர்கள், மின் வாரிய  பணியாளர்கள், மின் வர்த்தக தொழிலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

 

மேலும் அத்தியாவசிய தொழில்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள், அனைத்து அரசு ஊழியர்கள்அனைத்து மாநிலப் போக்குவரத்து  ஊழியர்கள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர், பேராசிரியர்கள், கட்டுப்பாட்டு பகுதிகளில் கோவிட் நோயாளிகளுக்கு உணவு பரிமாறும் தன்னார்வலர்கள்,.

மருத்துவமனைகளில் உதவி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கப்பல் தொழில்களில் பணிபுரியும் கடற்படையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், மேலும், மாற்றுத்திறனாளிகள் அவர்களது அடையாள அட்டையை காண்பித்து  வரிசையில் காத்திருக்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இந்த வாய்ப்பினை மேற்கண்டவர்கள் பயன்படுத்தி அரசு தலைமை  மருத்துவமனை அறந்தாங்கி, புதுக்கோட்டை நகராட்சி - நகர் மன்ற வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

மேலும் புதுக்கோட்டை வட்டாரம்; ஆதனக்கோட்டை, அன்னவாசல்  வட்டாரம் பரம்பூர், விராலிமலை  வட்டாரம் கொடும்பாளூர், திருமயம்  வட்டாரம் நற்சாந்துபட்டி.

அரிமளம்   வட்டாரம் கடியாப்பட்டி, பொன்னமராவதி  வட்டாரம் காரையூர், குன்றாண்டார்கோயில்  வட்டாரம் அண்டக்குளம், திருவரங்குளம் வட்டாரம் திருவரங்குளம், கறம்பக்குடி  வட்டாரம் மழையூர், கந்தர்வகோட்டை  வட்டாரம் புதுநகர், அறந்தாங்கி  வட்டாரம் நாகுடி, மணமேல்குடி  வட்டாரம் சிங்கவனம், ஆவுடையார்கோவில் வட்டாரம் பொன்பேத்தி  ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள  மையங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்மேலும் விவரங்களுக்கு 9498746783 என்ற அலைபேசி எண்ணில்  தொடர்பு  கொள்ளலாம்.

 

Top