logo
ஈரோடு மாநகராட்சி 4 மண்டலங்களிலும்  கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும்  பணி தீவிரம்

ஈரோடு மாநகராட்சி 4 மண்டலங்களிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

18/May/2021 07:51:11

ஈரோடு, மே: ஈரோடு மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும்  கிருமிநாசினி தெளித்து  தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலத்திலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி சார்பில் நான்கு வண்டிகளில் மாநகராட்சி சார்பில் இரண்டு வண்டிகள், தீயணைப்பு நிலையம் சார்பில் ஒரு வாங்கி, தனியார் பங்களிப்பு மூலம் ஒரு வண்டி எனவண்டிகளில் ராட்சத எந்திரம் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், காய்கறி மார்க்கெட், கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியும் இடங்களிலும் வண்டிகள் மூலம்   கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை இன்று மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Top