01/May/2021 05:12:29
ஈரோடு, ஏப்:ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனோ நாளுக்கு நாள் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு பகுதியிகளிலும் உள்ள அ.தி.மு.க.வினர் கொரோனோ தொற்றை தடுக்க பொது மக்களுக்கு உதவ வேண்டும் என அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு தேவையான முக கவசங்கள் , கையுறைகள், கிருமிநாசி னிகள், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுப குடிநீர் உள்ளிட்டவற்றை அதிமுகவினர் வழங்கி வருகின்றனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கம் பங்கேற்று பொது மக்களுக்கு கபசுப குடிநீரை வழங்கினார்.கே .எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் தங்கமுத்து, கோவிந்தராஜன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.