29/Dec/2020 10:33:57
மதுரை, டிச: மதுரையில் ஜன. 3-இல் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக முன்னாள் மத்திய அமைச்சரும், மு.கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி, ஜன. 3-ஆம் தேதி மதுரையில் பாண்டி கோயில் அருகே உள்ள பெரிய ஹோட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசணை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்குமு.க. அழகிரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.