03/Feb/2021 03:44:58
புதுக்கோட்டை, பிப்: 2017-18-ஆம் கல்வி ஆண்டில் படித்த பிளஸ்2 மாணவர்கள் அனைவருக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாக்கிழமை புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா மற்றும் நிர்வாகிகள் கார்த்திகாதேவி, சந்தோஷ், நித்திஷ்குமார், வைஷ்ணவி, வைரமணி, லக்சாகினி, மனோஜ், மகாதீர், வெங்கடேஷ், அருள்குரோஷியா உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்பாட்டத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரியிடம் கோரிக்கைகள் அடங்கி மனு சங்க நிர்வாகிகள் அளித்தனர்.