logo
ஈரோடு அருகே தங்கை மகளுக்கு  மாட்டு வண்டிகளில் சீர்வரிசை சுமந்து  சென்ற தாய் மாமன்...!

ஈரோடு அருகே தங்கை மகளுக்கு மாட்டு வண்டிகளில் சீர்வரிசை சுமந்து சென்ற தாய் மாமன்...!

28/Jan/2021 05:44:25

ஈரோடு, ஜன:  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் தங்கை மகளுக்கு பாரம்பரிய முறைப்படி 15 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடைசூழ  தாய்மாமன் சீர் வரிசை கொண்டு சென்று அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். 

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தனியார் மருத்துவமனை நடத்திவருபவர் ராஜா இவரது மனைவி தாராதேவியும் மருத்துவர் என்பதால் இருவரும் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். மருத்துவர் ராஜாவின் தங்கையான மோகனப்பிரியாவிற்கு திருமணமாகி ரிதன்யா மித்ராஸ்ரீ என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அந்த இரு பெண்களுக்கும்  பூப்புனித நீராட்டு  சடங்கு செய்யும் நிகழ்வு மோகனபிரியா – முத்துக்குமார் தம்பதிகளின் விவசாய தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

 இவ்விழாவிற்கு தாய் மாமன் சீதனம் அளிக்கும் வழக்கப்படி தாய் மாமனான ராஜா தங்கையின் மகள்களுக்கு சிறப்பான சீர்வரிசை செய்ய க திட்டமிட்டு அதையும் பாரம்பரிய முறையிலும் அனைவரும் வியக்கும் விதத்தில் அமையவேண்டும் என்ற எண்ணத்திலும் 100-க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர்வரிசைளை தாங்களே தயாரித்து 15-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் உற்றார் உறவினர்கள் புடைசூழ கோபிசெட்டிபாளைத்திலிருந்து கள்ளிப்பட்டியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மருத்துவரான ராஜாவே மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார்.


 அவரது பின்னால் உறவினர்களும் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளிலும் 100-க்கும் மேற்பட்ட கார்களிலும் பின்னால் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாட்டு வண்டியில் தாய் மாமன் சீர் கொண்டு சென்றதை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடனும்  வியப்புடனும் பார்த்து ரசித்தனர்.

மேலும் சடங்கு நடைபெறும் வீட்டிலும் பாரம்பரிய முறையிலும் நவநாகரீக காலத்திற்கு முன்பு முன்னோர்கள் காலத்தில் செய்யப்பட்ட அலங்காரம் போல் தென்னை ஓலையில் வேய்ந்த  அழகு பொருட்களும் ஓலைக் குடிசையும் பாரம்பரிய நெல்களை கொட்டி அதில் வைத்த சீர் வரிசை தட்டுகளும் அதேபோல் பித்தளை பாத்திரங்களில் சமைக்கப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளும் இதில் பங்கேற்ற உற்றார் உறவினர்களின் நினைவலைகளை 30 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றது.

 காங்கேயம் காளைகள் வெள்ளாடுகள் போன்ற கால்நடைகள் கண்காட்சியும் உறவினர்க ளை வெகுவாக கவர்ந்தது. மேலும் பாரம்பரியத்தை பறைசாற்றவும் வருங்கால சந்ததிக ளுக்கு பாரம்பரியத்தை நினைவு கூறவும் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தவும் பாரம்பரிய முறைப்படி தனது தங்கை மகள்களுக்கு பூப்புனித நன்னீராட்டு விழா நடத்தியுள்ளதாக தாய் மாமன் ராஜா தெரிவித்துள்ளார். 

இந்த பூப்புனித நன்னீராட்டு விழா நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் விழா முடிந்து வெளியில் செல்லும் போது கிராமப்புற திருவிழாவிற்கு வந்து சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டிப் பதையும் அழிந்து வரும் பாரம்பரிய அரிசியில் உணவு உண்ட மகிழ்சியில் திளைத்ததாக  தெரிவித்தனர்.

Top