logo
ஈரோடு  அருகே கரும்புத்தோட்டத்தில் நேரிட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதம்

ஈரோடு அருகே கரும்புத்தோட்டத்தில் நேரிட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதம்

07/Jun/2021 08:27:03

 

ஈரோடு, ஜூன்: ஈரோடு அருகே கரும்புத்தோட்டத்தில்  நேரிட்ட திடீர் தீ விபத்தால் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்பு பயிர்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

ஈரோடு அடுத்துள்ள நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி  குமரேசன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் ஆலைக் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவில் திடீரென்று கரும்பு தோட்டத்திலிருந்து  தீப்பிடித்தது. இதையடுத்து  தீ வேகமாகப் பரவியதால் தோட்டம் முழுவதும் இருந்த கரும்பு பயிர்கள்  தீப்பிடித்து சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பவானி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கரும்புத் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் இந்த தீவிப்பத்தில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் கருகி சாம்பலானது.

Top