04/Dec/2020 08:26:35
ஈரோடு : சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு . பீளமேடு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர்,அங்கிருந்து, காரில் ஈரோடு புறப்பட்டு சென்றார். கோபியில் முன்னாள் திமுக எம்எல்ஏ ஜி.பி.வெங்கிடு மறைவையொட்டி, அவரது இல்லத்திற்குச் சென்று குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்தார் .
இதையடுத்து பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் சென்றார். அங்கு, முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெரியசாமி மனைவி பத்மாவதி மறைவிற்கு நேரில் ஆறுதல் கூறினார். இந்த இரண்டு நிகழ்ச்சி களையும் முடித்துக்கொண்டு பவானி வழியாக சேலம் புறப்பட்டுச் சென்றார் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தெற்கு மாவட்ட செயலாளர் சு. முத்துசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்