logo
புதுக்கோட்டை அருகே கல்லூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 2 பேர் பலி-50 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே கல்லூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 2 பேர் பலி-50 பேர் காயம்

18/Feb/2021 08:40:07

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கல்லூர் கிராமத்தில்  கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி இருவர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருயம் தாலுகா, கல்லூரி கிராமத்தில் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் செம்முனீஸ்வரர் ஆலய திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி கோயில் திடலில் நடைபெற்றது.  இதில், புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சேலம்,சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1500 -க்கும் மேற்பட்ட காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.


  இந்த மஞ்சுவிரட்டில் திடலில் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகள் திக்கு திசை தெரியாமல்  சீறிப்பாய்ந்து சென்றன. ஆங்காங்கே காத்திருந்த  மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கினார்.

 இதில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த அன்சர் மற்றும் ராசி என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அன்சார்(27)உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  ராசு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும்  மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்க்க வந்தவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Top