logo
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக - மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடையே மோதல்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக - மக்கள் நீதி மய்யம் கட்சியினரிடையே மோதல்

25/Mar/2021 05:21:25

ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த்ராஜேஷை வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது எனத்தடுத்து  அதிமுக வினர் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர்  ஆனந்த்ராஜேஷ் வாக்கு சேகரிப்பதற்காக பிரசாரத்தை  வியாழக்கிழமை மேற்கொண்டார்.

அப்போது மொடக்குறிச்சி அருகே உள்ள பள்ளியூத்து என்னும் பகுதியில் ஓட்டு சேகரிக்க சென்ற போது அதிமுக பிரமுகர்கள்  இந்த ஏரியா அதிமுகவின் கோட்டை என்றும் இங்கு யாரும் பிரசாரம் செய்ய  வரக்கூடாது என்று கூறியதுடன்  மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆனந்த்ராஜேஸை தகாத வார்த்தைகள் பேசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் . இதனையடுத்து மக்கள் நீதி மையம் வேட்பாளர் உடன் சென்ற நிர்வாகிகள் மற்ற  உறுப்பினர்கள் அதிமுக பிரமுகரை தடுத்து நிறுத்த முற்பட்டதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

 இச்சம்பவம்  குறித்து தகவறிந்த  அரச்சலூர் காவல்நிலையப் போலீஸார் அங்கு வந்து பிரசாரம் செய்யும் வேட்பாளரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை என்றும் உடனடியாக அவர்களை பிரசாரம் செய்ய அனுமதிக்கவேண்டுமென கூறி அதிமுக பிரமுகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருகட்சியினருக்குமிடையே  ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Top