20/Nov/2020 06:29:02
புதுக்கோட்டை: அகில இந்திய அளவில் நவ.26 -இல் நடைபெறவுள்ள பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பங்கேற்பதென தீர்மானித்துள்ளது..
புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, பொருளாளர் வெ.அன்னபூரணம் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வாழ்;த்திப் பேசினார். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கு.சத்தி நிறைவுரையாற்றினார். லெட்சுமணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அகில இந்திய அளவில்நவ.26 அன்று நடைபெறவுள்ள பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் முழுமையாகப் பங்கேற்பது எனவும், போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் திரளான சத்துணவு ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் துரை.அரங்கசாமி, ஏ.லெட்சுமணன் உள்ளிட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.