19/May/2021 09:34:49
புதுக்கோட்டை, மே: தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு புதுக்கோட்டை விக்டரி லயன்ஸ் சங்கம் சார்பில் ரூ. 75 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது..
புதுக்கோட்டையிலுள்ள
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியின் முகாம் அலுவலகத்தில் நடந்த
நிகழ்வில்
விக்டரி லயன்ஸ் சங்கத்தலைவர் பி. காமராஜ் ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையை அமைச்சர் ரகுபதியிடம் வழங்கினார்.
இதில், முன்னாள் மண்டல தலைவர் வழக்குரைஞர் பி.ஜவகர்,சங்க செயலாளர் செந்தில்குமார், வட்டாரத் தலைவர் திருவள்ளுவன், முன்னாள் தலைவர் பாண்டித்துரை, முன்னாள் மண்டல தலைவர்கள் மதிவாணன், டாக்டர் ராம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.