logo
அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழா: சொந்த ஊரில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த  முதல்வர்

அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழா: சொந்த ஊரில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர்

17/Oct/2020 11:34:06

சேலம்: அதிமுகவின் 49-ஆது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் சனிக்கிழமை கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதையொட்டி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தனது தாயாரின் மறைவையொட்டி சொந்த கிராமத்தில் தங்கி இருப்பதால், தனது வீட்டின் எதிரே அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை  ஏற்றி வைத்தார். இதில், திரளான அதிமுக நிர்வாகிகள்,  தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Top