18/Nov/2020 10:42:10
ஈரோடு: ஈரோடு பழைய பாளையம் பகுதியில் வெட்கட்ரமணன்(49) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டின் பின்புறம் உள்ள மோட்டார் அறையில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டது.
இதைத்தொடர்ந்து, வெங்கட்ரமணன் நேற்று காலை மோட்டார் அறை கதவை திறந்து பார்த்த போது உள்ளே பாம்பு பதுங்கி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில், தீயணைப்பு வீரர்கள் வெங்கட்ரமணன் வீட்டிற்கு விரைந்து சென்று மோட்டார் அறையில் பதுங்கியிருந்த பாம்பை மீட்டனர். பிடிபட்ட பாம்பு 4 அடி நீளமுள்ள கொடிய விஷத் தன்மை கொண்ட கண்ணாடி விரியன் வகையை சேர்ந்தது எனவும், பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர் .