31/Jan/2021 11:42:49
புதுக்கோட்டை, ஜன:புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை(பிப்.1) மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடங்கி 10 மாதங்களுக்குப்பின் இந்த வாராந்திர குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: தமிழக முதலமைச் சரின் ஆணையின்படி திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம்; வருகிற திங்கள்கிழமை (1.2.2021) காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியினை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் இந்த குறைகேட்பு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இந்த முகாமுக்கு வரும் மனு தாரர்கள் தங்களது மனுவில் ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட்டு மனு அளிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.