logo
ஈரோட்டில் துணிநூல் பதனிடும் ஆலையில்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு

ஈரோட்டில் துணிநூல் பதனிடும் ஆலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆய்வு

30/Jun/2021 11:10:58

ஈரோடு, ஜூன்:ஈரோடு அசோக புறத்தில் இயங்கும் அரசின் துணிநூல் பதனிடும் ஆலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி  ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோட்டில் அசோகபுரத்தில் இயங்கிவரும் துணிநூல் பதனிடும் ஆலையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி மற்றும் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் துணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் துணியின் தரம்உற்பத்தி செய்யப்படும் விதம் அளவுகள் , பதனிடும் முறைகள் குறித்தும்  கேட்டறிந்தனர்.

பின்னர் நடைபெற்ற அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பள்ளி சீருடைகள் குறித்த காலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கேட்டுக்கொண்டார்.

ஆய்வின் போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி , ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்,கைத்தறி துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Top