02/Oct/2020 05:46:39
புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக பணி செய்தால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர்பாட்சா அறிவித்தார்.
மகாத்மா காந்தியின் 152 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் தூய்மையே சேவை என்ற நோக்கில் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கான பாராட்டும் (அக்.2) விழா நடைபெற்றது
இந்த விழாவில், நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், இதில் பேசிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கிர் பாஷா தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். பணியில் இருக்கும்போது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடன் பணிபுரிய வேண்டும்.
இனி வரக்கூடிய காலக்கட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் நகராட்சி அதிகாரிகள் பரக்கத், துப்புரவுப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.