logo
தீபாவளியை முன்னிட்டு  கறம்பக்குடி ரோட்டரி சார்பில் முப்பெரும் விழா

தீபாவளியை முன்னிட்டு கறம்பக்குடி ரோட்டரி சார்பில் முப்பெரும் விழா

13/Nov/2020 06:00:42

புதுக்கோட்டை: கறம்பக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக தீப ஒளி திருநாளை முன்னிட்டு முப்பெரும் விழா சங்கத் தலைவர் அ.செந்தில்குமார் தலைமையில் ராமையா ரெஸ்டாரண்டில்  நடைபெற்றது.

கறம்பக்குடி ரோட்டரி சங்கத்தின் சார்பாக தொடர்ந்து 19 ஆண்டுகளாக இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 25 பேருக்கு வேஷ்டியும் 25 பேருக்கு சேலையும் வழங்கப்பட்டது.மேலும், தாய் சேயை பாதுகாக்கும் விதமாக  10 தாய்மார்களுக்கு இலவச தாய் சேய் நல கிட் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக, ஏழைப்பெண்ணின் திருமணத்திற்காக ரூ.50 ஆயிரம் நிதியுதவி  வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்டம்-3000 மண்டல ஒருங்கிணைப்பாளர் வி.கர்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  கறம்ம்பக்குடி ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெ.ஜேம்ஸ், எவரெஸ்ட் சுரேஷ் முன்னிலை வகித்தனர். 

 சங்க முன்னாள் தலைவர்கள் டி.ஞானசேகரன்,பகருதீன், பி.ஜோதிமணி, ஏ.என்..சுப்பையா, கர்ணன், ஆர்.ரவி, ஆர்.வெள்ளைச்சாமி, இளையமனோகரன் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  துணைத் தலைவர் வே.காந்தி வரவேற்றார். நிறைவாக முன்னாள் தலைவர் சண்முகம் நன்றி கூறினார். நிகழ்ச்சி அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து நடத்தப்பட்டது. 


Top