logo
பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்: அதிக மகசூலுக்கு காத்திருக்கும்  விவசாயிகள்

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்: அதிக மகசூலுக்கு காத்திருக்கும் விவசாயிகள்

02/Mar/2021 06:47:29

ஈரோடு மார்ச்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள மரவாபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சூரியகாந்தி பயிர்கள் பூத்துக்குலுங்கி காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அந்தியூர் அருகே உள்ள மரவாபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராசு. இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்துள்ள  சூரியகாந்தி பூத்துக் குலுங்கி நிற்கிறது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,  சூரியகாந்தி பூக்கள் பயிரிட்டு 90 நாட்களில் அறுவடைக்கு வருவதாகவும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை லாபம் தருவதா கவும்.மேலும் பூக்களுக்கு வாரம் ஒருமுறை சொட்டுநீர் மூலம் தண்ணீர் தெளித்தால் போது மானதாது ஏக்கர் ஒன்றுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரை மட்டுமே  முதலீடு தேவைப்படு வதால் பெரும்பாலான விவசாயிகள் இப்பகுதியில் சூரியகாந்தியை பயிரிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  வியாபாரிகள் தங்களது தோட்டத்திற்கே வந்து சூரியகாந்தி பூக்களைப் பறித்துக் கொண்டு தங்களுக்கு உரிய விலையை அளிப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Top