logo
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மக்கள் நீதி மய்யத்தினர் நிவாரண உதவி

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மக்கள் நீதி மய்யத்தினர் நிவாரண உதவி

25/Sep/2020 06:28:26

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட நரிமேடு பகுதியில்  வரிசையாக 3 வீடுகள் தீ விபத்தில் சிக்கி முற்றிலும் சேதமடைந்து போனது. அரசு சார்பில் இதுவரை எந்த உதவிகளும் கிடைக்கப் பெறாத நிலை குறித்து தகவலறிந்த  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் 24-09-2020-அன்று  உணவுகள் மற்றும் பாத்திரங்கள் போன்ற நிவாரணப் பொருள்களை வழங்கி  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் நிலைமை சீராகும் வரை  மக்கள் நீதி மய்யத்தின் இயற்கை விவசாயி கார்த்திக்மெஸ் மூர்த்தி அவர்கள் உணவுப்பொருட்கள் வழங்குவதாக உறுதியளித்தார். இந்தத் தகவலை ஊடக மற்றும் செய்தித்தொடர்பு பிரிவு மாவட்டச்செயலர் ஜெய் பார்த்தீபன் தெரிவித்தார்.

Top