logo

கோட்டைப்பட்டினத்தில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

23/Sep/2020 10:34:28

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட வழங்கல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை

 தாசில்தார் செந்தில்குமார் மணமேல்குடி தாசில்தார் வில்லியம், , வட்ட வழங்கல் அலுவலர் ஹென்றி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் கவியரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று திடீர் சோதலையில் ஈடுட்டனர்.  அப்போது, கோட்டைப்பட்டினம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சேக்முகம்மது என்பவர் வீட்டில்  சோதனை நடத்தியபோது, பல மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனிடையே சேக் முகம்மது அங்கிருந்து தப்பி விட்டார். முதல் கட்ட விசாரணையில்,வெளியூர்களுக்கு கடத்தி செல்வதற்கு இந்த  ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து மணமேல்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.


Top