14/Mar/2021 01:12:25
காங்கிரஸ் கட்சி இல்லை என்றால் கூட்டணிக் கட்சி வெற்றிபெற முடியாது என காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சாா்பில் இத்தொகுதிக்கு வேட்பாளா் இதுவரை அறிவிக்கவில்லை. முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரத்தின் ஆதரவாளருக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் சிறிய கட்சி என்றாலும் ஆழமான வேருள்ள கட்சி, அதனால் அதிக வாக்குகள் பெறும். திமுக, காங்கிரஸ் இரண்டும் சேர்ந்தால்கான் பெரிய வெற்றி கிடைக்கும். வடமாநிலங்களை போன்று தமிழ்நாட்டையும் கலவர பூமியாக மாற்ற பாஜக முயற்சித்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை ஏறாதபோதும், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது என குற்றம்சாட்டிய சிதம்பரம், வாக்காளர்களில் 25 சதவீதம் பேர் வாக்குச்சாவடியில் தான் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்கிறார்கள் என்றார்.