logo
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர்பி.ஆர்.குழந்தைவேல்  வேட்புமனு தாக்கல் செய்தார்

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர்பி.ஆர்.குழந்தைவேல் வேட்புமனு தாக்கல் செய்தார்

19/Mar/2021 09:43:31

ஈரோடு, மார்ச்:  ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணி யில் உள்ள தேமுதிக வேட்பாளர் பி.ஆர். குழந்தைவேல்  பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இலாஹிஜா னிடம் தனது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம்  வேட்பாளர் பி.ஆர்.குழந்தைவேல் கூறியதாவது: பெருந்துறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த தேமுதிக தலைவருக்கும் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோருக்கு நன்றி.பெருந்துறை தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்சனை, கழிவுநீர் பிரச்னை உள்பட அனைத்து பிரச்னைகளையும் வெற்றி பெற்றவுடன் உடனடியாக சரிசெய் வேன் என்றார். 

இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன்,உயர்மட்ட குழு உறுப்பினர் கோபால், மாவட்ட நிர்வாகி தமிழ்நாடு பாபு, ஊத்துகுளி ஒன்றிய செயலாளர் சண்முகம், திருப்பூர் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஆனந்த், பெருந்துறை ஒன்றியம் ராஜேந்திரன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் குமாரசாமி.

ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் ஆனந்த், அமமுக மாவட்ட செயலாளர் சக்தி சுப்ரமணியம், அமமுக மாவட்ட வர்த்தக அணி வெங்கடேஷ், அமமுக மாநில நெசவாளரணி செயலாளர் தரணிசண்முகம் மற்றும் தேமுதிக மற்றும்  அமமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top