logo
முன்னுரிமை ரேசன் அட்டைகளாக மாற்றக்கோரி வாலிபர் சங்கம் மனுக் கொடுத்து ஆர்ப்பாட்டம்

முன்னுரிமை ரேசன் அட்டைகளாக மாற்றக்கோரி வாலிபர் சங்கம் மனுக் கொடுத்து ஆர்ப்பாட்டம்

11/Jan/2021 09:14:25

புதுக்கோட்டை, ஜன:  என்பிஎச்எச் மற்றும் என்பிஎச்எஸ் குடும்ப அட்டைகளை முன்னுரிமை (பிஎச்எச்) அட்டைகளாக மாற்றவும், அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேசன்கடைகளில் வழங்கவும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் விமல்துரை தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.சரவணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர் ஏ.குமாரவேல், முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், என்.தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரபு, அழகர், கார்த்திக், நடராஜன், கனகராஜ், பாலா, தினகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் ஆலங்குடி வட்டாட்சியர்; யோகேஸ்வரனிடம் கோரிக்கை அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

Top