logo
சென்னையில் ஜெ. நினைவிடம் திறப்பு: ஈரோடிலிருந்து அதிமுவினர் பயணம்

சென்னையில் ஜெ. நினைவிடம் திறப்பு: ஈரோடிலிருந்து அதிமுவினர் பயணம்

26/Jan/2021 09:18:49

ஈரோடு:  சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்ட ஜெ., நினைவிடத்தில் புதன்கிழமை காலை 11  மணிக்கு திறப்பு விழா நடக்கிறது.

 இவ்விழாவுக்காக ஈரோடு மாநகர மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க., நிர்வாகிகள், கார்களில் புறப்பட்டு சென்றனர். தொண்டர்களுக்கான ஏற்பாடு குறித்து, ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம் கூறியதாவது:

சென்னையில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்காக வருகை தர விரும்பும் தொண்டர்கள் பட்டியல், கடந்த பத்து நாட்களாக பெறப்பட்டது. 40 அரசு மற்றும் தனியார் பஸ், 40 கார், நான்கு வேன் ஏற்பாடு செய்து, 2,500 பேர் அழைத்து செல்கிறோம். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் பாட்டில், தங்கும் இடம் ஏற்பாடு செய்துள்ளோம். கூடுதலாக வர விரும்புவோருக்கு, கூடுதலாக வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். ஈரோடு மேற்கு, கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி தொகுதியில் இருந்து, இந்த வாகனங்கள் புறப்பட்டு செல்கின்றன என்றார் அவர்.

Top