logo

கூட்டுறவு பணியார் நாணய சங்க ஆண்டுப் பேரவைக்கூட்டம்

02/Nov/2020 09:01:38

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கல்வித்துறை பணியார்கள் கூட்டுறவு சிக்கன நாயண சங்க 39-வது ஆண்டுப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கூட்டுறவு சிக்கன நாணய சங்கத் தலைவர் ச.ரெங்கராஜூ தலைமை வகித்தார். துணைத் தலைவர் மா.குமரேசன் வரவேற்றார். விழாவில் கலந்துகொண்டு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு பங்கு ஆதாய காசோலை மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

சங்க செயலாளர் மு.மணிராஜன், தலைமை ஆசிரியர் திருச்செல்வம் மற்றும் சங்க இயக்குனர்கள் பங்கேற்றனர். முடிவில் இயக்குனர் அ.லதா நன்றி கூறினார்.


Top