27/May/2021 02:25:34
புதுக்கோட்டை
மாவட்டம், கறம்பக்குடி அருகே கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கறம்பக்குடி அருகேயுள்ள மானியவயலைச் சேர்ந்த 40 வயது
ஆண். திருப்பூரில் வேலைபார்த்து வந்துள்ளார். பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊருக்கு
கடந்த 15 தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அவருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கொரோனா
பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில், கரோனா உறுதியானதைத்தொடர்ந்து, பட்டுக்கோட்டை அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு, இருதினங்களுக்கு
முன்பு கண், மூக்கு உள்ளிட்ட பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருப்பு பூஞ்சை தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து,
அவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.