22/Jun/2021 10:05:22
சென்னை, ஜூன்: நவம்பர் 15 முதல்
நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் கடைப்பிடிக்கப்படும்
என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிக் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து
பாதுகாக்கும் வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான
வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர்
காகர்லா உஷா பிறப்பித்த அரசாணை விவரம்:
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி
வாரியங்களைச் சேர்ந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும்.
மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும்,
அது சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யவும்
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு
அமைக்கப்படும்.
இந்தக்
குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்
இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத
பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்ப பள்ளி
சாரா வெளிநபர் ஒருவர் என உறுப்பினர்களாக இருப்பர்.
ஒரு மாத காலத்தில் மாநில
அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக் கல்வித் துறை
உருவாக்க
அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத்
தெரிவிக்கும் வகையில் இந்த மையத்தில் கட்டணமில்லா
நேரடி தொலைபேசி மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல்
வசதி உருவாக்கப்படும்.
விரைவில் மாநில கட்டுப்பாட்டு அறை:
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக்
கட்டுப்பாட்டு அறைக்குத்
தெரிவிக்க வேண்டும். இந்த மையம் புகார்களைப் பதிவு செய்வது மட்டுமின்றி
அது சார்ந்த பின்பற்ற வேண்டிய அனைத்து
வழிகாட்டு நெறிமுறைகளையும்
சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு
வழங்கும். இந்த மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர். இந்த மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்து
முறையாகப் பாதுகாக்கப்படும்.
போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி
:
பள்ளிகளை சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும்
போக்ஸோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த
முழுபுரிதல் உண்டாகும் வகையில் ஆண்டுதோறும் பயிற்சிகள்
அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம்
பள்ளிச் கல்வித்துறையால்
உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுய தணிக்கை செய்வதை உறுதி
செய்யவும் பள்ளிக் கல்வித்துறையால் கட்டகம் உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.
இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு
உடை அணிய வேண்டும். இணையவழிக் கற்றல்
கற்பித்தல் நிகழ்களை முழுமையாகப் பதிவு செய்வதோடு அந்தப் பதிவுகளைக் குறிப்பிட்ட
இடைவெளியில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர்
ஆய்வு செய்ய வேண்டும்.
புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை
எளிதாக தெரிவிப்பதற்காகப்
பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.
பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்த தக்க நடவடிக்கை எடுக்கும்.
மாணவர் புகார்கள் பதிவேடு: இந்த ஆலோசனைக்குழு பள்ளியில் பெறப்பட்ட
அனைத்து புகார்களையும் பதிவு செய்யத் தனியாக
ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும். புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும்
(வாய்மொழி உள்பட) இந்தப் பதிவேட்டில் பதியப்பட
வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும்
நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.