27/Jan/2024 06:17:10
புதுக்கோட்டை:திருப்பூர் மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர்
மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர்
சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு.மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,திருப்பூர்
மாவட்டம், பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலை
கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசும், காவல்துறையும் செய்தியாளர்களின்
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கச்செயலர் சா.ஜெயப்பிரகாஷ், பொருளாளர் கே.சுரேஷ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், செய்தியாளர்கள் ஷேக், மோகன்ராம்,ராஜ்குமார், பாண்டி, நியாஸ், தண்ணீர்மலை, பாபு,ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.செயற்குழு உறுப்பினர் ம.மு.கண்ணன் நன்றி கூறினார்.