logo
ஈரோட்டில் தொடர்ந்து 3-ஆவது நாளாக இன்று 181  இடங்களில் 19,380 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோட்டில் தொடர்ந்து 3-ஆவது நாளாக இன்று 181 இடங்களில் 19,380 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

17/Aug/2021 05:53:02

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில்  தொடர்ந்து 3-ஆவது நாளாக நேற்று 181  இடங்களில் நடைபெற்ற முகாம்கள் மூலம்  19,380 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது.

அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதலில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தடுப்பூசி போடப்படும் மையங்களுக்கு முன்பு இரவிலேயே மக்கள் குவியத் தொடங்கி விடுகின்றனர். இதன் காரணமாக டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. பின்னர், கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்ட வந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி அடிப்படையில் அந்தந்த தேர்தல் நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோட்டில் கடந்த 2 நாட்களாக கோவிசில்டு தடுப்பூசி முதல் டோஸ் மட்டும் இரண்டாம் டோஸ் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து,   மூன்றாவது நாளாக  நேற்று தாளவாடி, நம்பியூர் பவானி, கொடுமுடி,  அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, சித்தோடு உட்பட 181 இடங்களில் நடைபெற்ற முகாம்கள் மூலம் 19 ஆயிரத்து 380 பேருக்கு கோவிஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

டோக்கன் அடிப்படையில் 100 முதல் 300 பேர் வரை ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.கோவிஷீல்டு முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டது.

Top