logo
அறந்தாங்கி பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் திருநங்கைகளுக்கு நிவாரண உதவிகள் அளிப்பு

அறந்தாங்கி பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் திருநங்கைகளுக்கு நிவாரண உதவிகள் அளிப்பு

04/Jul/2021 11:19:14

புதுக்கோட்டை, ஜூலை:  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் திருநங்கைகளுக்கு  கொரோனா பேரிடர் கால நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன.

ரோட்டரி மாவட்டம் 3000 த்தின் அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில்  ஸ்டார் ஆண்டின் தலைவர். சேக் சுல்தான்  தலைமையில் துணை ஆளுநர்  ஆர். கருணாகரன் நடைபெற்ற  சங்கத்தின் நிகழாண்டின்  முதல் திட்டச் சேவை  தொடக்க விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் பி.வி. சரவணன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சுமார் 75 திருநங்கைகளுக்கு மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து கொரோனா நலத்திட்ட உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், ரூ 100 சேர்த்து ஒரு நபருக்கு ரூ. 1200 மதிப்புள்ள பொருட்கள்  வழங்கப்பட்டன.

நிகழ்வில்,   வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், நகராட்சி ஆணையர் அய்யனார், பட்டய தலைவர் தங்கதுரை, நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆதி மோகன குமார், செயலாளர் புவனா செந்தில்குமார் பொருளாளர் ஆத்மா மதிவாணன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.

Top