logo
ஈரோட்டில் ஒரே நாளில் முககவசம் அணியாத 342 பேருக்கு அபராதம்: ஊரடங்கை  மீறிய 323 பேர் மீது வழக்கு பதிவு

ஈரோட்டில் ஒரே நாளில் முககவசம் அணியாத 342 பேருக்கு அபராதம்: ஊரடங்கை மீறிய 323 பேர் மீது வழக்கு பதிவு

25/Jun/2021 04:57:05

ஈரோடு, ஜூன்:ஈரோட்டில் ஒரே நாளில் முககவசம் அணியாத 342 பேருக்கு அபராதமும்  ஊரடங்கை  மீறிய 323 பேர் மீது போலீஸார்  வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 28 -ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சசிமோகன் எச்சரித்திருந்தார்.

31-ஆவது நாளான வியாழக்கிழமை  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில், முக கவசம் அணியாமல் வந்த 342 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 323 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 288 இருசக்கரவாகனங்களும், 7 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாளில்  மட்டும் ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பின் காரணமாக தேவையின்றி  வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை  வெகுவாகக் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Top