logo
 ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு

30/Jun/2021 10:24:10

ஈரோடு, ஜூன்:  ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முககவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி  சசிமோகன் தெரிவித்திருந்தார்.

36 -வது நாளான புதன்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முக கவசம் அணியாமல் வந்த 458 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டதுவழக்கத்தைவிட முக கவசம் அணியாதவர்களுக்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது. ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 197 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 188 இருசக்கரவாகனங்களும், பநான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் மட்டும் ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் மாநகராட்சி சார்பிலும் அலுவலர்கள் ஆங்காங்கு சோதனை செய்து முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கும்  அபராதம் விதித்தனர்.

Top