06/Nov/2020 06:31:07
ஈரோடு, வீரப்பன்சத்திரம், பேருந்து நிறுத்தம் அருகில் அனைத்து சங்கங்கள் சார்பில் இன்று (6-11-2020) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கச் செயலாளர் வை.பாண்டியன் தலைமை வகித்தார்.
எல்பிஎப் நிர்வாகிகள் கே.முருகேசன், எம்.சந்திரன், ஏஐடியுசி நிர்வாகிகள் எஸ்.பெருமாள்,டி.ஏ.செல்வம். சிஐடியு நிர்வாகிகள் வி.ராஜேந்திரன், கே.ரவிச்சந்திரன், பிடிஎஸ் நிர்வாகிகள் எம்.சுதாகர், கே.சேகர், எல்எல்எப் நிர்வாகிகள் சிவகுமார், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், சம்மேளன துணைத் தலைவர் பொன்.பாரதி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், பிடிஎஸ் மாவட்டச் செயலாளர் பொ.வை.ஆறுமுகம், எல்எல்எப் சங்கத் தலைவர் பழ.மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.