30/Jun/2021 09:59:34
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் நதிகள் பாதுகாப்பு இயக்கம் எனும் புதியஅமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சாவடிப்பாளையம் கோசாலையில் புதன்கிழமை (30.6.2021) காலையில் மாவட்ட விவசாயப் பிரதிநிதிகள் கலந்து
கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நதிகள் பாதுகாப்பு இயக்கம் என்றதொரு
அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக
கௌரவத் தலைவர் சுவாமி இராமானந்தர் , தலைவர் எஸ்.ஆர்.சுப்ரமணியம், துணைத்தலைவர் ஏ.ஆர்.திருமூர்த்தி, செயலாளர்
எஸ்.ஏ.காந்தி, இணைச்செயலாளர் பி.
குமரவேல், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.ஆ.தங்கவேல், கே.வி.அய்யாவு. வி.குருசேவ், கே.கே.செல்வராஜ், எம்.பரமசிவம் , தணிக்கையாளர் வ.தேவிபிரசாத் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.