18/Jun/2021 10:51:11
புதுக்கோட்டை, ஜூன்: பத்திரிகையாளரை தாக்க முயற்சித்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட
அறிக்கை: தினமலர் நாளிதழின் (சென்னைப் பதிப்பு)
புதுக்கோட்டை மாவட்ட நிருபர் மீனாட்சிசுந்தரம் ஆலங்குடியிலுள்ள தனது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில்
தனது அலுவலகத்துக்கு செய்தி அனுப்பிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த காவலர் ஒருவர் அலுவலகத்தைப் பூட்டச்
சொல்லி வற்புறுத்தியுள்ளார்..
தினமலர் செய்தியாளர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர் செய்திகளை அனுப்பி முடித்த பின்னர் அலுவலகத் தை பூட்டி விடுவதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்தக் காவலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நிருபரை தாக்க முற்பட்டதும் கண்டிக்கத்தக்கது. கொரோனா பொது முடக்கக் காலத்தில் முன்களப் பணியாளர்களாக அறி விக்கப்பட்டுள்ள
பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதை மாவட்டக் காவல் துறை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அந்தக் காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் (Pudukkottai District Press Association- PDPA) வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.