logo
கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்

கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல்

15/Mar/2021 05:48:34

ஈரோடு, மார்ச்:  அதிமுக சார்பில் கோபிசசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது வேட்பு மனுவை  திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  கடந்த 12-ஆம் தேதியிலிருந்து அந்தந்த தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவரிடம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டி பாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான பழனிதேவியிடம்  திங்கள்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். 

முன்னதாக, கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்தில் தோ்தல் பணிக்காக கட்சி பணிமனையை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னா் பேருந்து நிலையம் பகுதியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டா்களுடன் கச்சேரி மேடு வரை ஊா்வலமாக சென்று கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வேட்பாளருக்கான  உறுதிமொழி ஏற்றுக்கொண்டாா்.

Top