logo
 ஜூன் 7 முதல் 14   வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: பாதிப்பு குறைவான மாவட்டங்களும் கூடுதல் தளர்வுகள்- தமிழக அரசு அறிவிப்பு

ஜூன் 7 முதல் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: பாதிப்பு குறைவான மாவட்டங்களும் கூடுதல் தளர்வுகள்- தமிழக அரசு அறிவிப்பு

05/Jun/2021 12:40:32

சென்னை, ஜூன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 7 முதல் 14   வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறித்துள்ளது. இதில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு 7 வகையான தளர்வுகளும் கொரோனா குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு 15 விதமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக இந்திய அரசின் வழிகாட்டுதலின்படிதமிழ்நாட்டில் 25. 3. 2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில  தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 27. 5. 2021 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கொரோனா நோய் தொற்று   தடுப்பு நடவடிக்கைகள் 30 6 2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஆணையிடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு  நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 7-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும்.

நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப் பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021  அன்று காலை 6 மணி வரை  சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு  ஊரடங்கை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்இந்த ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கெனவே  அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

தமிழ் நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு. சேலம், கரூர், நாமக்கல்தஞ்சாவூர்திருவாரூர்நாகப்பட்டினம்மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

எனவே, இம்மாவட்டங்களில் நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கெனவே பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலும் அதே சமயம் பொதுமக்களின்  அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் தற்போது ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்   கட்டுப்பாடுகளுடன் 7.6.2021  முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலைமணி முதல் மாலைமணி வரை அனுமதிக்கப்படும்.  காய்கறி மற்றும் பூ விற்பனை, பழம் விற்பனை நடைபாதைக் கடைகள் காலைமணி முதல் மாலைமணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்மீன் சந்தைகள் மொத்த விற்பனை க்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும்.

மேற்பட்ட  இடங்களில் திறந்தவெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கு மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக் கப்படும்.

அனைத்து அரசு அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50 %  டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவில் மேற்கொள்ளப்படும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை பதிவுடன் அறிவிக்கப்படும்.

மின் பணியாளர் பிளம்பர் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்க பார் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மாலை 5 மணி வரை  - பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் மென்பொருள்கள் பல்புகள் கேபிள்கள் சுவிட்சுகள் மாற்றம் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் விற்பனை நிலையங்கள் தவிர காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் அனுமதிக்கப்படும் கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் வாகனம் விநியோகம் செய்பவர்கள் வாகன பழுது மையங்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாடகை வாகனங்கள் டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் பரிவுடன் செல்ல அனுமதிக்கப்படும் மேலும் வாடகை டாக்ஸி ஓட்டுனர் தவிர 3 பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பதவிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் களிடமிருந்து -பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

கோயம்புத்தூர், திருப்பூர் ,சேலம்கரூர், ஈரோடுநாமக்கல்திருச்சி மற்றும் மதுரை  உள்ளிட்ட  11 மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின் ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும் மாதிரி அனுப்புவதற்கு மட்டும் 10% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி பழங்கள் விற்பனை செய்யும் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இது தொடர்ந்து செயல்படுத்தப்படும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அருகே உள்ள கடைகளில் நடந்து சென்று பொருட்களை வாங்குமாறு நாங்க மாறும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங் களில்  கடைகளுக்கு  செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீடிக்கும் தடைகள்  விவரம்வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தொடர்ந்து தடை நீட்டிப்பு. டாஸ்மாக் கடைகள் திறக்க தடை. பொது போக்குவரத்திற்கு தடை.சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு.சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை.டீக்கடைகள் திறக்க அனுமதி இல்லை.


Top