logo
தன்னலமற்ற சேவை: புதுக்கோட்டை  நகராட்சி  பெண் சுகாதாரப்பணியாளர்களுக்கு பாராட்டு

தன்னலமற்ற சேவை: புதுக்கோட்டை நகராட்சி பெண் சுகாதாரப்பணியாளர்களுக்கு பாராட்டு

30/Jun/2021 04:33:19

புதுக்கோட்டை, ஜூன் தன்னலமற்ற சேவையாற்றி வரும்   நகராட்சி  பெண் சுகாதாரப்பணியாளர்களுக்கு புதுக்கோட்டையாச் சேர்ந்த சான்றோர்களால் பாராட்டி  கௌரவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை காந்தி பூங்காவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில்    புதுக்கோட்டையின்  சமூக ஆர்வலர்கள், இந்திய ரெட்கிராஸ் சங்கம், மரம் நண்பர்கள், சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் இணைந்து புதுக்கோட்டை நகராட்சி பெண் சுகாதார பணியாளர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தனர்.

இதில்சுமார் 100-க்கும்  மேற்பட்ட பெண் சுகாதாரப்பணியாளர்கள் மற்றும்   பணி ஓய்வுபெறும் சுகாதாரப் பணியாளர்களுக்கு   சால்வை அணிவித்து  நினைவுப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

விழாவில்   இந்திய ரெட்கிராஸ் சங்க புதுக்கோட்டை கிளைத் தலைவர் சீனுசின்னப்பா , நகராட்சி மேலாளர் மற்றும் ஆணையர் (பொ) பா.கிருஷ்ணவேணி, கணக்கர்  வே.விஜயஸ்ரீ, இந்திய ரெட்கிராஸ் சங்க  புதுக்கோட்டை கிளைச் செயலர் முனைவர் ஜெ.ராஜாமுகமது, சமூக ஆர்வலர் எஸ்.ஆரோக்கியசாமி, முன்னாள் நகர்மன்ற.துணைத்தலைவர் நைனா முகமது, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் . இப்ராஹிம் பாபு.

மரம் நண்பர்கள் பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் மெஸ் மூர்த்தி, பழனியப்பா கண்ணன், பொறியாளர் ரியாஸ்கான், பொறியாளர் வி.இறையன்பு , சமூக ஆர்வலர் ராம.சு.சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை  இந்திய ரெட்கிராஸ் சங்க புதுக்கோட்டை கிளை இணைச் செயலாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன் செய்திருந்தார்.

.   

Top