01/Jan/2021 11:39:40
புதுக்கோட்டை-ஜன: ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பொது மக்கள் தங்களது வீட்டு வாசலில் அதிகாலையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல வண்ணக் கோலமிட்டு வளமான வாழ்வை வேண்டி பட்டாசுகளை வெடித்து, நண்பர்களுக்கு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் பெரியோர்களுக்கு பரிசுகளையும் தந்து வணங்கி வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி புதுக்கோட்டையில் அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயிலில் நள்ளிரவு 12.01 மணிக்கு மங்களவாத்தியம் முழங்க பாலபிஷேகம், பன்னீர், தயிர்,பஞ்சாமிர்தம்,இளநீர் சந்தனம்,மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு மலர்அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. விநாயகருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொற்பனைக் கோட்டை அருள்மிகு பொற்பனைமுனீஸ்வரர் கோயில் திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில், அரியநாட்சிஅம்மன்,மனோமணியம்மன் கோவில் சாந்தநாதர் சுவாமி திருக்கோயில் திருவப்பூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்.
குமரமலை தண்டாயுதபாணி திருக்கோயில் , திருக்கோகர்ணம் ஸ்ரீபிரகதம்பாள் திருக்கோயில், பெரம்பூர் வீரம்மாகாளியம்மன் கோயில் .உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் உற்சவர்களுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.